நாட்டின் நலனுக்காக ஆயிரக்கணக்கான பிக்குகள் கலந்து கொண்ட பிரித் ஓதல் நிகழ்வு

Prathees
2 years ago
நாட்டின் நலனுக்காக  ஆயிரக்கணக்கான பிக்குகள்  கலந்து கொண்ட பிரித் ஓதல்  நிகழ்வு

நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும் பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'ஜயபிரித் ஓதுதல்' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பிக்குகளின் பங்குபற்றுதலுடன் ஜயபிரித் ஓதப்பட்டது.

போர்வீரர்கள், ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் ஆயுதப்படையினரின் குடும்பங்களுக்கு ஆசி வழங்குவதே ஜெயபிரித் ஓதலின் மற்றொரு நோக்கமாகும். 

ஜனாதிபதி ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, ​​முதன்முறையாக 3000-5000 துறவிகளின் பங்கேற்புடன் ஜயபிரீத் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு ஜயபிரித் ஓதுவதற்காக ஆயிரக்கணக்கான மகா சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.