ஜனவரி 31 வரை மின்சாரதுண்டிப்பு ஏற்படாது!
Mayoorikka
2 years ago
ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சாரம் தடைப்படும் என பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என செய்தி வெளியாகி உள்ளது.