பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்

Mayoorikka
2 years ago
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்

மூட நம்பிக்கைகளுக்கு ஏமாறாது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

50 இலட்சத்து 46 ஆயிரத்து 823 பேருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.

மேலும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத நோயாளர்களின் நிலைமை மோசமடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.