சுதந்திர தினத்தில் ரஞ்சனுக்கு சுதந்திரம் கோரி கலைஞர்கள் ஜனாதிபதிக்கு ஒரு செய்தி

#SriLanka #Ranjan Ramanayake #Sri Lanka President
சுதந்திர தினத்தில் ரஞ்சனுக்கு சுதந்திரம் கோரி கலைஞர்கள் ஜனாதிபதிக்கு ஒரு செய்தி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரி கலைஞர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு விசேட மகஜர் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான கடிதம் அண்மையில் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கையொப்பமிடப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஜனாதிபதியிடம் கடிதத்தை கையளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வைத்திய ஆலோசனையின் பேரில் அனைத்து விழாக்களில் இருந்தும் குறுகிய காலத்திற்கு விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4