தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர் மற்றொரு வெடிகுண்டை வைத்ததாக தகவல்

Prathees
2 years ago
தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர் மற்றொரு வெடிகுண்டை வைத்ததாக தகவல்

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டை வைத்த நபர் மேலும் இரண்டு கைக்குண்டுகளை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று (29) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும், பெல்லன்வில விகாரை வளாகத்திலும் சந்தேகநபர் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனவரி 11 ஆம் திகதி, பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.