7 மாதங்களின் பின் மிருகக்காட்சிசாலைக்கு வந்த நீல கழுத்து கிளி
Prathees
2 years ago
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைத்து ஏழு மாதங்களாக காணாமல் போயிருந்த 150,000 ரூபா பெறுமதியான நீலநிற கழுத்து கிளி கடந்த 26ஆம் திகதி மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிளி கடந்த மே 7ம் தேதி முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுவதுடன் சுமார் 350,000 ரூபாய் பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி கடந்த வருடம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி கூண்டிலிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
எனினும் அந்த கிளி பொதுமக்களின் ஆதரவுடன் 25ம் திகதி மாலை மீண்டும் உயிரியல் பூங்காவிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது..