அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம்!
Mayoorikka
2 years ago
மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
தீப்பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.