அரசாங்கம் பிழையை திருத்திக்கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது - அமைச்சர் விமல் அறிவுரை!

Reha
2 years ago
அரசாங்கம் பிழையை திருத்திக்கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது - அமைச்சர் விமல் அறிவுரை!

அரசாங்கம் பிழையை திருத்திக்கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது எனவும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கொள்கைகளிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவம்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் வர்த்தக ரீதியான விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவுப்பாதுகாப்பும் பாதிக்கப்படும். நாட்டின் விவசாயத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் உரப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடாது. தற்பொழுதாவது நாம் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.