நீதி அமைச்சிற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Mayoorikka
2 years ago
நீதி அமைச்சிற்கு எதிராக  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.