சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் STF அதிகாரியின் உடல் கண்டெடுப்பு
Prathees
2 years ago
சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஹப்புத்தளை முகாமைச் சேர்ந்தவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நெற்றிப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.