மற்றொரு சோகம்! நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்களில் நால்வர் பலி - ஒருவர் மாயம்

Prathees
2 years ago
மற்றொரு சோகம்! நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்களில்  நால்வர் பலி - ஒருவர் மாயம்

உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர்களில்    மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது