மாகாண சபைகள் ஒழிப்பு: பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு

Prathees
2 years ago
மாகாண சபைகள் ஒழிப்பு: பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு


அடுத்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு அரசியலமைப்பு வரைவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக 
1972 அரசியலமைப்பின்படி பிரதமர் பதவியை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் மாகாண சபைகள் உள்வாங்கப்படாத நிலையில் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளும் இல்லாதொழிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தக் குழு தனது பூர்வாங்க அரசியலமைப்பு வரைவை பெப்ரவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

புதிய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் பல அம்சங்களில் பொது இணக்கப்பாடு காணப்படுவதாகவும்இ நாடாளுமன்றத்தில் சுமார் 10 வீதத்தால் விவாதம் நடத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.