நாங்கள் ஆட்சி அமைத்தாலும் நாடு அபிவிருத்தி அடையாது: சரத் பொன்சேகா

Prathees
2 years ago
நாங்கள் ஆட்சி அமைத்தாலும் நாடு அபிவிருத்தி அடையாது: சரத் பொன்சேகா

தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

"நாங்கள் ஆட்சியைப் பிடித்தாலும் இந்த நாடு வளர்ச்சியடையாது. மறுபுறம் பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். எங்களிடம் சிறந்த மனிதர்களும் உள்ளனர்.

எனினும் இந்த நாடு இருபுறமும் வளர்ச்சியடையாது. ஏன் வளர்ச்சி அடையாது என்றால், ஊழல் மற்றும் துஷ்பிரயோகம். பொறுப்பற்றதன்மை 

நாட்டின் உற்பத்தி இல்லாமல் நாடு ஒரு பக்கம் உயராது. 

நமது கட்சி மாற வேண்டுமானால் இவற்றைப் புரிந்து கொண்டு இந்த வழியில் செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.