மன்னா மலிந்த பொலிஸாரால் கைது

Prathees
2 years ago
மன்னா மலிந்த பொலிஸாரால் கைது

மன்னா மலிந்த என அழைக்கப்படும் இசுரு நிலந்த என்பவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னா ஆயுதங்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தியமை மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் உட்பட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கஹதுடுவ பொல்கசோவிட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்திய பொலிஸ் காவலில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லோடியாவின் முக்கிய உதவியாளர்  நம்பப்படுகிறது.