கொவிட் தொற்று மீண்டும் அதிகரிப்பு
Prathees
2 years ago
இன்று (30) 1056 கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 610,103 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,420 ஆக அதிகரித்துள்ளது.