சிமெந்து மோசடி: எடுக்கப்பட்ட நடவடிக்கை

Mayoorikka
2 years ago
சிமெந்து மோசடி: எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாட்டில் செயற்படும் சீமெந்து மோசடி தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு விளக்கமளிக்க இலங்கை கட்டுமான சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு இருவருக்குமே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி  தெரிவித்துள்ளார்.

மேலும் சீமெந்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்க , சீமெந்து சந்தையானது தரகர்களின் கைகளுக்குச் செல்வதே காரணம் எனவும் சீமெந்து தட்டுப்பாட்டால் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுவதாகவும் இதனால் நிர்மாணத் தொழிலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  இலங்கை கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.