மரவள்ளிக்கிழங்கு உண்ணும் யுகம் ஆரம்பம்
Mayoorikka
2 years ago
பொருளாதார ரீதியாக தற்போது இலங்கை கடைசி இடத்திற்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சோற்றுக்காக கையேந்தி வருவதாகவும், மீண்டும் நாம் அனைவரும் மரவள்ளிக்கிழங்கு உண்ணும் யுகத்திற்கு செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு என்ற வகையில் ஒரு வேளை உணவாவது இருக்கவேண்டும் எனவும் ஆனால் இலங்கையில் அதுவும் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.