பரீட்சை நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்காதீர்கள்

Mayoorikka
2 years ago
பரீட்சை நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்காதீர்கள்

பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சார சபை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

மின்வெட்டு ஏற்பட்டால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.