தெற்கு கடற்பரப்பில் கைதான 17 பேரில் ஐவர் விடுதலை

#Arrest
Reha
2 years ago
தெற்கு கடற்பரப்பில் கைதான 17 பேரில் ஐவர் விடுதலை

தெற்கு கடற்பரப்பில் 3,300 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதான 17 பேர் இன்று(31) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது அவர்களில் ஐந்து பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிவான் ஏனைய 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த 12 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.