மஹிந்த விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து

Mayoorikka
2 years ago
மஹிந்த விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கொவிட்-19 சவாலின் ஆரம்பத்திலிருந்து இலங்கையும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவிகளைப் புரிந்திருப்பதுடன், இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு பலமைடைந்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிராகப் போராட சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றும் சீன சபாநாயகர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளின் சட்டவாக்க சபைகளுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதன் ஊடாக இலங்கையுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த சீனா உத்தேசித்துள்ளதாக சீன சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தின் ஊடாக மற்றுமொரு சலுகை விலை!

சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று (31) முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.