இந்திய மீனவப் படகு மோதி இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு: வடக்கில் வலுக்கும் போராட்டம்

Mayoorikka
2 years ago
இந்திய மீனவப் படகு மோதி இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு: வடக்கில் வலுக்கும் போராட்டம்

இந்திய மீனவப் படகு மோதி, இரண்டு இலங்கை மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நியாயத்தை பெற்றுத் தரக் கோரி, வடக்கு மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவப் படகொன்று, இந்திய இழுவைப் படகில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த படகில் பயணித்த இரண்டு மீனவர்களும் காணாமல் போன நிலையில், அந்த மீனவர்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன.

இதையடுத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் பிடிக்க முயற்சித்த தருணத்தில், மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.