நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பழுது பார்க்கப்பட்ட மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது!
Mayoorikka
2 years ago
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பழுது பார்க்கப்பட்ட மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பக் கோளாறினால் குறித்த இயந்திரம் பழுதடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 270 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.