நாமல் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Mayoorikka
2 years ago
நாமல் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பணமோசடி சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் ரூ.30 மில்லியன் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.