இனி சிறிய பொதிகளில் வரும் திரவப் பால் வழங்க நடவடிக்கை - தலைவர் கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே தெரிவிப்பு
Mayoorikka
2 years ago
திரவப் பாலை சிறிய பொதிகளில் சந்தைக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கால்நடை தீவன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.