சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட எதிர்ப்பு தெரிவிக்கும் வாசு

Prathees
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட எதிர்ப்பு தெரிவிக்கும் வாசு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு தான் இன்னமும் எதிர்ப்பதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.