கோட்டாபயவுக்கு தனது குடும்பத்திடமிருந்து தப்பிக்கும் ஆளுமை இல்லை: அத்துரலிய தேரர்

Prathees
2 years ago
கோட்டாபயவுக்கு தனது குடும்பத்திடமிருந்து தப்பிக்கும் ஆளுமை இல்லை: அத்துரலிய தேரர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியே அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் உதவியுடன் அரசியல் விளையாடுவதாகவும் ஆனால் அரசியல் உயரதிகாரிகளை நிர்வகிக்கும் திறன் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்திடமிருந்து தப்பிக்கும் ஆளுமை இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஏனெனில் கோட்டாபய ராஜபக்ச முப்பது வருடங்களாக இலங்கையில் வசிக்கவில்லை எனவும் இந்த நாட்டுடனான  அவரது பிணைப்பில் குறைபாடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.