பெற்றோல், டீசலை சந்தைக்கு விடுவிக்கும் போது தொடர்ந்தும் நட்டம்
Prabha Praneetha
2 years ago
பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.