அரசு கட்டுக்கதையை பின்பற்றுகிறது.. நான் அறிவியல் பூர்வமானவன்! சஜித்
சமகி ஜன பலவேகய என்பது நாட்டுக்கு பெறுமதி சேர்க்கும் அரசியல் கட்சியே தவிர, காட்சி அரசியலை நம்பி செயல்படும் கட்சி அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அன்று முதல் இன்று வரை இயங்கும் அரசாங்கம் இன்று கட்டுக்கதையின் பின்னால் ஓடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
அவரும் அவரது குழுவினரும் அறிவியல் பூர்வமாக உண்மைகளை எடுத்துச் சொன்னபோது அரசு கிண்டலாக சிரித்ததாகவும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும், அரசாங்கம் மாயையின் பின்னால் ஓடுவதாகவும்இ அதன் விளைவாக நாடு இன்னும் பாதிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் சமகி ஜனபலவேகயவின் கம்பஹா மாவட்ட திவுலபிட்டிய தேர்தல் சபைக் கூட்டம் நடைபெற்றது.
அபிவிருத்தியில் பல பகுதிகள் இருப்பதாக அஙடகு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சில மாற்றுக் குழுக்கள் அதில் ஒரு பகுதியை மாத்திரம் கைப்பற்றி சமகி ஜன பலவேகயவின் திட்டத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.