அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்
Prabha Praneetha
2 years ago
டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில், 500 அரிசி கொள்கலன்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த கொள்கலன்களில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்க முடியாமல் போனால் சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.