அத்துமீறலுக்கு தீர்வு கோரி கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக மீனவர்கள் போராட்டம்

Mayoorikka
2 years ago
அத்துமீறலுக்கு தீர்வு கோரி கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக மீனவர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தீர்வு கோரி கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, அமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு 5 பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளது.