மின்னல் தாக்கங்களினால் பாதிப்பு ஏற்படக்கூடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Prasu
4 years ago
மின்னல் தாக்கங்களினால் பாதிப்பு ஏற்படக்கூடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

  • அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்
  • மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்
  • கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை
  • காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • யாழ்ப்பாணம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
  • கண்டி - சிறிதளவில் மழை பெய்யும்
  • நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்
  • மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4