சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

Mayoorikka
2 years ago
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று  மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சுகாதார அமைச்சருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.