ஏ9 வீதியில் தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! காரணம் என்ன?

Prathees
2 years ago
ஏ9 வீதியில் தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! காரணம் என்ன?

ஏ9 வீதியில் நாவுல - அரங்கல பகுதியில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (09) இரவு 10 மணியளவில் மாத்தளை செல்லும் வழியில் கடை ஒன்றுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
 
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் அருகிலிருந்த கடைக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தீயினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.