மின்சார வழங்கலில் தடை இருக்காது. ஆனால் பயனாளிகள் அளவாக பயன்படுத்தவும். மின்சார சபை கோரிக்கை.
#SriLanka
Nila
2 years ago
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.