யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்த அதிஷ்டம் - தேர்தல் ஆசன எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது!

#SriLanka
Nila
4 years ago
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்த அதிஷ்டம் - தேர்தல் ஆசன எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது!

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 19ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் சேர்க்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் யாழ் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்படும்.

அடுத்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4