மாணவர்களுக்கு புதிய தொழிற்பயிற்சி வழங்கத் திட்டம்!

Mayoorikka
2 years ago
மாணவர்களுக்கு புதிய தொழிற்பயிற்சி வழங்கத் திட்டம்!

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.