எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் : மே மாதத்திற்குள் கடலில் வீழ்ந்துள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் நிறைவடையும்
Mayoorikka
4 years ago
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த கழிவுபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் தகவல் வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அழிவினை அடுத்து கடலில் வீழ்ந்துள்ள கழிவுபொருட்களை அகற்றுவதற்காக சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளன.
இதேவேளை மே மாதத்திற்குள் தமது பணிகள் அனைத்தும் நிறைவடையும் என சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே