இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Covid Vaccine
Nila
2 years ago
இலங்கையில்  பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கொரோனாவுக்கான மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் எவரும் உயிரிழப்புக்கு ஆளாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.மேலும் வைத்தியர் விஜேமுனியின் கூற்றுப்படி,

கொழும்பில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை பதிவான 33 கோவிட் இறப்புகளில், 08 பேர் கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறவில்லை, 22 பேர் மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசியைப் பெறவில்லை, மீதமுள்ள மூன்று பேர் மட்டுமே பெற்றுள்ளனர் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் 90 வீதமானவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்ற அதேவேளை, அரசாங்கப் பாடசாலைகளில் 50 வீதமானவர்கள் மாத்திரமே ஆர்வம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.