நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்! வெளியிடப்பட்ட தகவல்

Mayoorikka
2 years ago
நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்! வெளியிடப்பட்ட தகவல்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 304 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 595,649 ஆக அதிகரித்துள்ளது.

 இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 629,347 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 15,844 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.