நாளாந்த மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
#SriLanka
#Power
#Time
Mugunthan Mugunthan
2 years ago
நாளாந்த மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
"எரிபொருள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். அந்த அனுமானத்தின் பேரில் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். இது குறித்து CEB-க்கு தெரிவித்துள்ளோம்." இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நீர் மின் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக தினசரி மின்வெட்டு ஏற்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.