40 வயது ஆண் ஒருவரை காதலித்த இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி: பிணவறையில் 60வயது பெண்! தீவிர சிகிச்சை பிரிவில் 32வயது பெண்
40 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்த இரண்டு பெண்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பிலியந்தலையில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய பெண் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிலியந்தலை மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண். 32 வயதான பெண்ணே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க தெரிவிக்கையில்,
தூக்கிட்டு தற்கொகை செய்த 60 வயது பெண்ணின் கணவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின் சில மாதங்களுக்குப் பிறகுஇ அவள் 25 வயது இளைஞனுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
அவனுடைய சொகுசு வீடு உட்பட அவனது சொத்துக்கள் அனைத்தையும் அவனுடைய சொந்தமாக்கிக் கொள்வதற்கான சூழ்ச்சியாக தனது பெயரில் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள்.
அப்போது இளைஞராக இருந்த 40 வயதுடையவர்இ அவளுடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கத் தொடங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்இ தான் முழு மனதுடன் நேசித்தவர் பிலியந்தலை பிரதேசத்தில் யுவதி ஒருவரை இரகசியமாக திருமணம் செய்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளார்.
இதனைக் கேட்டு பொறுக்க முடியாத 60 வயதுப் பெண்மணிஇ 32 வயதுடைய பெண்ணின் வீட்டுக்குச் சென்று இதுபற்றி விசாரித்துள்ளார்.
அது உறுதிசெய்யப்பட்டதையடுத்துஇ வீட்டுக்குத் திரும்பிய அவர்இ பணிப்பெண்ணை கடையொன்றுக்கு அனுப்பிவிட்டுஇ அங்குள்ள சொகுசு வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அவர் பல ஆண்டுகளாக காதலித்து வந்த 40 வயது நபருக்கு எழுதப்பட்ட பல பக்க கடிதத்தையும் அவரது சடலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்
32 வயதுடைய திருமணமான பெண்ணும், தான் திருமணம் செய்து கொண்ட நபர் 60 வயதுடைய பெண் ஒருவருடன் பல வருடங்களாக தொடர்பு கொண்டிருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.