சட்டமா அதிபர் ஒரு பொது ஊழியர்! அரசியல் கைக்கூலியாக இருக்கக்கூடாது: ஷெஹான் மாலகவின் கைது குறித்து பேராயர் கருத்து

Prathees
4 years ago
சட்டமா அதிபர் ஒரு பொது ஊழியர்! அரசியல் கைக்கூலியாக இருக்கக்கூடாது: ஷெஹான் மாலகவின் கைது குறித்து பேராயர் கருத்து

சட்டமா அதிபர் ஒரு அரசியல் கைப்பாவை அல்ல, அரச ஊழியர் எனவும்,அரசாங்கத்தின் சதிச் செயற்பாடுகளை இனங்கண்டு, உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்  பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீதியில் வைத்து ஷெஹான் மாலக கமகே என்ற இளைஞன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த கர்தினால் அவர்கள்,

வீதியில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் ஷெஹான் மாலக்க கடத்தப்பட்டார்.

அவர் அதை ஒரு நேரடி காணொளி மூலம் இந்த நாட்டுக்கு உறுதிப்படுத்தாமல் இருந்திருந்தால், ஷெஹான் மாலக்க எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது. அவர்கள் பொலீஸ் சீருடையில் வந்து அவ்வாறு செய்கிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடத்தல் சம்பவமாக நடந்துள்ளது.

இது ஒரு ஜனநாயக சமூகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒழுக்கக்கேடான மற்றும் வன்முறைச் செயல் என்று நான் விளக்குகிறேன். எனவேஇ இக்கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

இச்சம்பவம் ஷெஹான் மாலக என்ற இளைஞனின் மனித உரிமை மீறலாகவே நான் கருதுகிறேன்.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையில் நிவாரணத்திற்கான நம்பிக்கையை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது

இந்த நேரத்தில் மனிதர்களுக்கு செய்யும் அழிவுகள் தலைமறைவாக உள்ளதா என்ற கேள்வி எமக்கு உள்ளது.

ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மனித உரிமை. அந்த உரிமையை பாதுகாக்க நீதித்துறையின் உதவியை நாடுகிறோம்.

சட்டமா அதிபர் இவ்வாறான அட்டூழியங்களைச் செய்வார் என நாம் எதிர்பார்க்கவில்லை.

அவர் ஒரு பொது ஊழியர்இ அரசியல்வாதிகளின் கைக்கூலி அல்ல.

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய சட்டமா அதிபர், பஸ்காவுக்கு நீதி கோரி வருபவர்களை கைது செய்வதை நாம் காண்கிறோம்.

சட்டமா அதிபருக்கு அவ்வாறான உரிமை இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4