வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பஸ் தரிப்பிடத்தில் நின்றவர்களை பந்தாடிய லொறி!

#SriLanka #Vavuniya #Police
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பஸ் தரிப்பிடத்தில் நின்றவர்களை பந்தாடிய லொறி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

கனகராயன் குளம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளனர்.

இதன் போது வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துஜா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொறி அதி வேகமாக வந்த நிலையில் வேத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.