வடக்கு கிழக்கு எம்பிக்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
4 years ago
வடக்கு  கிழக்கு எம்பிக்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில்   ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில்   ஜனாதிபதி செயலக வளாகத்தில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்றுள்ளனர்

அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசனும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4