சிங்களவர்கள் கொடுமையனவர்கள் என்பது முற்றிலும் உண்மை: முன்னாள் ஜனாதிபதி

Prathees
2 years ago
சிங்களவர்கள் கொடுமையனவர்கள் என்பது முற்றிலும் உண்மை: முன்னாள் ஜனாதிபதி

சிங்களவர்கள்  பொடுமைப்படுத்துபவர்கள் என அனகாரிக தர்மபால தெரிவித்த கருத்து தற்போது  இந்த நாட்டு மக்களுக்கு பொருந்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனகாரிக தர்மபால  துறவியாக இருந்து இந்தியா சென்று,  தனது நாடு இலங்கை என்றும் நன்றிகெட்டவர்கள் தனது நாட்டில் இருப்பதால் தான் இலங்கையை விட்டு இந்தியா வந்ததாகவும் இலங்கையின் பக்கம் தலை வைத்து உறங்கமாட்டேன் என்று கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தர்மபால அன்று கூறியது போன்று சிங்களவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட கதை இன்றும் பொருத்தமானது எனவும், அது ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவையில் அமைந்துள்ள அனகாரிக தர்மபால ஸ்தூபியின் திறப்பு விழாக் கல்லை புனரமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.