சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் அறநெறிச் சிறார்களின் ஆன்மிகச் செயற்பாடுகளுக்கு ஊக்கம் நல்கும் விதத்தில் சிவாலயங்களுக்கு நிதியுதவி

Keerthi
2 years ago
சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் அறநெறிச் சிறார்களின் ஆன்மிகச் செயற்பாடுகளுக்கு ஊக்கம் நல்கும் விதத்தில் சிவாலயங்களுக்கு நிதியுதவி

எதிர்வரும் 01.03.2022 அன்று, நிகழவிருக்கும் சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு, ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியிலே தெரிவுசெய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைத் திருநாட்டின் பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் இந்த நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

இளம் இந்துச் சிறார்களின் ஆன்மிக உணர்வுகளை மேன்மையுறச்செய்து, கலை நிகழ்வுகள் மூலமாக ஆக்கத்திறன் ஆளுமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுப்பதோடு, மேன்மேலும் அவர்களுக்கு ஊக்கம் நல்கும் விதத்திலே பரிசில்கள் வழங்கிப் பாராட்டுதல் என்ற முக்கிய நோக்கத்தினை உடையதாகவே, மகாசிவராத்திரி விரத புண்ணிய நன்னாளை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியிலே சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சரும் கௌரவ பிரதமரின் இந்துமத இனைப்பாளர் ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள் தெரிவித்துள்ளார்.