குரங்கிற்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்திய கிராம மக்கள்... நடந்தது இது தான்...

Prathees
4 years ago
குரங்கிற்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்திய கிராம மக்கள்... நடந்தது இது தான்...

இந்து மத சடங்கு படி இறந்த குரங்குக்கு மக்கள் இறுதி சடங்கு நடந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் நகரில் மனிதர்களைப் போல் குரங்குக்கு இறுதிப் பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.

இந்து மத நம்பிக்கையின் படி குரங்குகளின் அனுமனின் படைகளாக பார்க்கப்படுகிறது. ராமயணத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல ராமர் பாலத்தை கட்ட உதவியது குரங்குகள்தான்.

இந்தியாவின் பல இடங்களில் பல வகையான குரங்குகள் உள்ளன. இப்படியாக உ.பி மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இறந்து போன குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்தினர்

உ.பி மாநிலம் அவுரையாபாத் மாவட்டம் பாப்ஹூந்த் பகுதியில் ஒரு குரங்கு ஒன்று எலெக்ட்ரிக் ஒயரில் ஷாக் அடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

அந்த குரங்கிற்கு அந்த ஊர் மக்கள் இந்து மத முறைப்படி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். குரங்கின் சடலத்தை குளிப்பாட்டி, அதற்கு மாலை போட்டு காவித்துணி போட்டு போத்தி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர். 

பதின்மூன்றாம் நாள் சடங்குகளில் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதுமட்டுமின்றிஇ கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் 12 நாட்களாக இரங்கல் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4