மன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Prathees
2 years ago
மன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கை மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 08 இந்திய மீனவர்களுடன் இந்திய இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Covid-19 நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டுஇ இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது