நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Prasu
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் இன்று ஏ,பி,சி ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இருந்த அதே அட்டவணையின் கீழ் நாளை முதல் ஒவ்வொரு பிரதேசத்திலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.