அனைத்து வலயங்களுக்கும் நாளை சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்

Reha
2 years ago
அனைத்து வலயங்களுக்கும் நாளை சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்

அனைத்து வலயங்களுக்கும் நாளை சுழற்சி முறையில் காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினுள், அதிக மின் கேள்வி நிலவும் இரவு வேளைகளில், தேவை ஏற்படின் திட்டமிடப்படாத 30 நிமிட மின்துண்டிப்பு அமுலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் நுகர்வை குறைத்து சிக்கனம் பேணுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.